திங்கள், 5 மே, 2014






அருள்மிகு சந்தன பூமாரியம்மன்  திருக்கோயில் திருவிழா , வரும் வியாழக்கிழமை 7-5-2014 அன்று முள்ளங்காடு ,பூண்டி, கோவை யில் காலை 9.00am,முதல் நடைபெறவுள்ளது . குழந்தைகள் நடத்தும் இந்த மாரியம்மன் கோயில் திருவிழாவை நமது சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி மூலம் நடக்கவிருக்கிறது , இதில் அன்பர்கள் கலந்து கொண்டு குருவின் அருளும் அம்மனின் திருவருளும் பெற்று இன்புற்றிருக்க அன்புடன் அழைக்கிறோம்.







அருள்மிகு சந்தன பூமாரியம்மன் திருக்கோயில் திருவிழா 





செவ்வாய், 1 ஏப்ரல், 2014

சீவன் சிவமாகும் நிலை

                                                          சீவன் சிவமாகும்  நிலை


                        அறியாமையில் இருப்பதுவும் ஆன்மாவே. 
                        அதை சரியான  ப்ராணாயாமம் பயிற்சியின்
                        மூலம் வழிநடத்துவதால் அந்த ஆன்மா 
                        அறியாமை விலகி சீவன் என்ற நிலையில்
                        பரிணாமமாகிறது. உத்தம ப்ராணாயாமத்தின் 
                        மூலமாக அந்த ப்ராணன் மேல் நோக்கி எழும்பி 
                        பரிபூரண நிலை அடைகிறது. 
                                     இதுவே சீவன் சிவமாகும் நிலை.